திங்கள், 31 மே, 2010

தண்ணீர் தேவை




அமெரிக்காவில் வசந்தம்/கோடை தொடங்கிவிட்டதால் எங்கும் சிறுவர்கள் விளையாட்டும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள், நடப்பவர்கள் என்று வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது.பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் கூவி பாடும் பறவைகளுமாய் வாழ்க்கையின் இனிமைக்காலம் இது. பசுமையான புல்வெளியும் பூக்கள் நிறைந்து வாசனையுடன் கூடிய தோட்டமும் வீட்டிற்கும் ஒரு அழகைத்தந்திருக்கிறது. உடல் இயக்கங்கள் அதிகரிக்க நீர் பருகும் தேவை அதிகமாகிவிட்டது.

ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.

சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

தண்ணீர் சமன்பாடு
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.

சில சமயம் அல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சரிவர சுரக்காமல் போகும் போது தண்ணீர் வெளியேறி மனிதன் இறக்கும் நிலை கூட வரலாம். இதற்கு நீரிழிவு இன்ஸிபெடஸ் என்ற பெயர்.

மிக சிறிய கைக்குழந்தைகள், அதிலும் பிரசவ காலத்திற்கு முன்னே பிறந்தவர்கள், வயதானவர்கள் நீர் சரிசம நிலையில் வைத்திருக்க முடியாமல் சங்கடப்படுவார்கள். அதே சமயம் மருத்துவமனையில் இரத்த சிறைகள் மூலமாக நீர் செலுத்தினால் அதிக நீர் சேர்ந்து பிரச்சினை வரும். எனவே வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நீர் அருந்துவது அவசியமாகும்.

வயதானவர்கள் தண்ணீர் இழக்கும் போது குழப்பம், தெளிவின்மை போன்றவற்றிற்கு ஆளாவதால் தனியாக கோடை காலங்களில் வெளியே செல்லும் போது கவனம் தேவை. தாகம் எடுப்பதை உணரக்கூட முடியாமல் வயதாக வயதாக திண்டாட நேரிடும். எனவே அவர்களை பார்த்துக்கொள்பவர்கள் பார்த்து நீர் தருவது அவசியமாகும். தாகம் எடுப்பதை உணர முடியாமல் தண்ணீர் அளவு குறைந்து போய் இவர்கள் கஷ்டப்படலாம். அப்போது சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும் எனவே சிறுநீரக கற்கள் உண்டாகும் சாத்தியம் அதிகமாகிறது. வியர்ப்பது குறைந்து சோடியம், யூரியா போன்றவை உடலிலேயே தங்கிவிடும். இன்னும் அதிக நீர் இழப்பு இருந்தால் திசுக்கள் சுருங்கி சரிவர வேலை செய்யாது. மூளை இதயம் சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்ய இயலாது. எல்லா உறுப்புகளும் ஒருவித அதிர்ச்சிக்கு உட்பட்டு இறக்க நேரிடும். அதிக கோடை காலம், உடற்பயிற்சி போன்ற சமயங்களில் தண்ணீர் அருந்துவது மிக முக்கியம். தண்ணீர் அருந்தி உடலை மென்மையாக வைத்திருப்பது எளிதானது. அதேபோல நீரின் அளாவு அதிகமாகும் போதும் சோடியம் பொட்டாஸியம் போன்ற மின்னணுக்கள் அளவு குறைந்து இரத்தம் நீர்த்து போய் பிரச்சினைகள் வருகின்றன. திசுக்கள் நீர் அதிகம் கொண்டு சரிவர வேலை செய்வதில்லை. இந்த பிரச்சினைகள் சிறுநீரக குறைபாட்டால் ஏற்படலாம்.

அதிக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பவர்கள் அதேபோல நீர் அருந்துவதும் முக்கியம். மருந்துகளில் தேவை இல்லாத வேதிப்பொருட்களை கல்லீரல் நீரில் கரைத்தே வெளியேற்றுகிறது.

நீர் அருந்தும் போது அதை காப்பி, தேநீர், கோக், பெப்ஸி போன்ற குளிர்/சூடான பானங்களால் நிரப்ப நினைத்தால் அது தவறானது. தேநீர் காப்பி போன்ற பானங்கள் சிறுநீர் வெளியேற உதவுவதால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மென்பானங்களோ அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தால் எலும்புகள், பற்களை கரைக்கிறது. அதில் உள்ள சர்க்கரை உடலின் எடையை கூட்டுவதோடு இன்னும் சில நோய்களை தரவல்லது. தண்ணீருக்கு நிகர் எதுவும் இல்லை !!
ஒரு நாளைக்கு தேவையான நீரை எப்படி அருதுவது என்பதற்கு மருத்துவர்கள் ஒரு எளிய வழி சொல்கிறார்கள். காலை உணவுக்கு முன் ஒரு கோப்பை, காலை உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, மதிய உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பை, மதிய உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, இரவு உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பையும் இரவு உணவு உண்ட ஒரு மணி கழித்து ஒரு கோப்பை என்றும் பழகிக்கொள்ளலாம். அதிக நீர் அருந்துவது தோலை வறட்சியாக்காமல் இருக்கவும் உதவும்.
நன்றி-பத்மா அர்விந்த்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

தொலைக்காட்சி ஒரு தொல்லை





வீட்டுக்கு வந்தவுடனே நம்மாளுங்க 90% பேர் பாக்குறது என்னான்னு யோசிச்சு பாத்தோம்னா அது டிவி ரிமோட். அதுக்குள்ள தான் எவ்வளவோ விஷயங்கள். அந்த காலத்துல நிறைய டிவிக்கள் வருவதற்கு முன்னாடி, எல்லாரும் என்ன வேலை இருந்தாலும் உக்காந்து 'ஒலியும் ஒளியும்' பாப்பாங்க. அப்புறமா ராமயணம், மஹபாரதம் இதெல்லாம் பாத்தோம். ஆனா காலம் போக போக நிறைய சானல்கள் வந்தன. அதனொடு சேர்த்து கொடுத்திருக்காங்க, ஒரு ஒரு விஷயத்தையும் ஒரு ஒரு சானலும்!

ஒரு சானல் பாத்தா உங்களுக்கு, சிரிப்பு வராத விஷயதுக்கும் எப்படி சிரிக்கணும்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா ஆட தெரியலைனாலும் எப்படியெல்லாம் சமாலிக்களாம்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா அறிவு பூர்வமாவே பேசுரது எப்படின்னு சொல்லி கொடுப்பாங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

உயிர கொடுத்து ஒரு ஆள் ஆடிருப்பான். இன்னொரு ஆள் நம்ம உயிர் போற அளவுக்கு ஆடிருப்பான். இதுக்கு நடுவர்கள், என்ன சொல்லுவாங்க தெரியுமா?, இந்த மாதிரி ஒரு ஆட்டத்த இது வரைக்கும் யாருமே பாத்திருக்க மாட்டாங்கன்னு ஒரு பதில் சொல்லுவார்கள். அட அந்த கருமத்த சரியில்லனா சரியில்லன்னு சொல்லுங்களேன். அத அந்த டிவி ஆட்கள் அனுமதிச்சிதான் தொலைங்களேன்யா. எவ்ளோ நாளுக்குதான் இப்படியே சொல்லுவீங்கப்பா? எப்போ யார் எப்படி ஆடினாலும், ' உங்களோட அந்த பாடி லாங்குவெஜ் இருக்கு பாத்தீங்களா பிரமாதம்' அப்டி இப்டின்னு சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்மள ரணகளப்படுத்தரதயே வேலயா வெச்சிருக்கவங்க பல பேர் உலாவுகிறார்கள். மக்களே உஷாரு! மீறி பாத்தா அடங்கப்ப சாமி நாங்க என்ன பண்ணுவோம், தலைவர் கௌண்டமணி சொல்ற மாதிரி, "நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா' அப்டின்னு அடுத்த சானலை மாத்துவோம்.

இன்னொரு சானல் வரும் பாருங்க, கதற கதற அடிப்பானுங்க, இன்னொரு சானல் எந்த செய்தி சொல்லுதோ, அதுக்கு எதிர் மாறாவேதான் செய்தி சொல்லுவாங்க. இவங்களுக்கு மட்டும் இது ரொம்ப ஈசி. இவங்களுக்கான எதிரி சானல் என்ன சொன்னாலும் இல்ல சாமி போட்ட இவங்க பொழுது ஒடிடும். நாம வேற என்ன பண்ணுவோம், மறுபடியும் முதலெந்து சியர்ஸ் சொல்லணும். அடுத்த சானலுக்கு போவோமா ரெடியா?

அடுத்த சானல் மாத்தினா, அங்க ஒரு ரகளை விட்ராங்க பாருங்க, 'நான் வேற நாடு போகறது தடை பட்டுகிட்டே இருக்குங்க என்று கவலையோடு ஒருவர் சொல்ல, கவலைப்படாதீங்க உங்க பேர் சொல்லுங்க, அம்மா எல்லாத்தையும் சரி பண்ணுன்வாங்க என்று சொல்லி, ஒரு முதிர்ந்த மேடம் பக்கம் திரும்ப, அவங்க உடனே அந்த பக்கம் இருக்கிற கரும்பலகை பக்கம் திரும்பி, வேகமா ' உங்க பேர் சொல்லுங்க சார்' அப்படி சொன்ன உடனே, இவர் , ' என் பேர் ராஜசேகர் மேடம்' என்று பய பக்தியோடு கூற, மறுபடியும் அவர், 'உங்க பிறந்த தேதி சொல்லுங்க' என்றவுடன், இவரும் சொல்லி முடிக்க, ஏதாவது தெளிவா சொல்லுவார்னு நாமலும் சலைக்காம பாத்துட்டு இருப்போம்.

அப்போ ஒரு விளம்பர இடைவேளை. நம்ம பய புள்ளைங்க எவன் கேக்கறான், அதெல்லாம் வேணாம்டா, ஆப்பு ரெடி ஆகுதுடான்னு சொன்னா? அதற்குள் விளம்பர இடைவேளை முடிய, அந்த மேடம், வேகம் வேகமாக சில கூட்டல் கழித்தல் அந்த கரும்பலகையில் நிகழ்த்தி இருப்பாங்கனு நினைக்கும் படியாக நிறைந்திருக்கும். அவங்க தொண்டையை கனைத்து கொண்டே, ' மிஸ்டர் ராஜசேகர், உங்க ராசி எண் படி, உங்க பேரில் ஒரு அழுத்தம் இல்லை பாருங்க. அந்த ஆ சப்தம் தான் மூலாதாரம். அது இல்லைன்னா வாழ்க்கை நரகமாகதான் இருக்கும், அதனால இன்னுமொரு ஆங்கில எழுத்து A சேர்த்துகோங்க. எங்கயோ பொய்டுவீங்க. அதுக்கு அப்புறம் பாருங்க, உடனே வெளி நாடு போய்டுவீங்க'. அப்டின்னு சொன்னவுடன், அகில உலகத்தின் ஒரே எண் கணித மேதை அப்டின்னு போட்டு, நிகழ்ச்சி முடியும்!

அவன் அவன் பாஸ்போர்ட், விசான்னு எல்லாத்தையும் எடுத்து வெசிக்கிட்டு, கதறிக்கிட்டு இருக்கான். போக முடியலை. இது ஒரு எடுத்துக்காடுதான். இது போல பல நிகழ்ச்சிகள், வாஸ்து கலாமணி, எண் கணித மேதைகள் எவ்வளவோ பேர் உலவுகிரார்கள். இதன் மூலம் உழைப்பை மறக்க செய்யும் சானல்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படியெல்லாம் நிகழ்ச்சி காட்டிகிட்டே இருந்தா, நான் அழுதுடுவேன். வேணாம் வலிக்குது!ஒரு பக்கம் பாத்தா சூடான மோதல்கள், கருத்து பரிமாற்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகளால் அலங்கரித்தாலும் அந்த மீடியா என்ற மகுடத்தில், மத்த விஷயங்கள் எல்லாமே கவரிங்காவே கறுத்து போகுது!

ஏங்க அந்த துறையில உள்ள ஆட்கள் ஏதாவது பாத்து பண்ணுங்கப்பா. வெள்ளி திரை இல்லன்னா சின்ன திரை பாதி இல்லாம போய்டும் நிலைதான் இருக்கு. பாத்துக்கங்கப்பா, இப்போவே கண்ண கட்டுது!!!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழின் பெருமை


தமிழை ஆராயும் ஆய்வாளர்களே தமிழின் பெருமை உணர்ந்து செயல்படுங்கள் . உங்களின் கவனத்திற்குச் சில சொற்கள்
" திருவள்ளுவர் காலம் முதல் நம் காலத்தில் பாரதியார் ,மறைமலையடிகள், திரு. வி . க . வரை பல தமிழ்ப் பேர் அறிஞர்கள் பேசியும் எழுதியும் வளர்த்துப் பண்படுத்திய பெருமொழி நம் தமிழ் மொழி . எயத்தனையோ இடை யுருகளுக்கு இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மொழியும் பண்பாடும் இடையறாமல் வந்திருப்பது நம் தமிழின் ஒரு தனிச்சிறப்பு . அரசுகள் மாறின அமைசுகள் மாறின ஆனால் தமிழ்மொழியும் பண்பாடும் மாறாமல் வந்துள்ளன . அவ்வாறு இடையறாமல் வளர்ந்து வந்திருக்கும் இவ்விரு செல்வங்களையும் காப்பாற்றும் பெரிய பொறுப்பு இளைங்கர்களுக்குண்டு "
-மு . வரதராசனார் பேசியது .

“ நான் யாரென்று கேட்டால் கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ்க் காதலன். தமிழைப் பெருங்கடல் என்று தமிழை அடக்கத்துடன் ஆராய்ந்து தட்டுத்தடுமாறித் தமிழ் பேசுகிற சிற்று}ழியன் நான். நான் தமிழை என் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறேன்”
- கமில் சுவலபில்

ஞாயிறு, 28 மார்ச், 2010

பத்தாம் வகுப்பு


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் முதல் தாளில் கேள்வித்தாள் மாற்றிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தினை விவாதிக்கும் முன் ,சில விசயங்களை அலச வேண்டிஉள்ளது.

குளறுபடி நடந்த இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வு அலுவலர் மற்றும் பறக்கும் படை என அனைத்து மதிப்புக்குரியவர்களும் இருந்தனர். விடை தாள் கொடுக்கப்பட்ட உடனே ,மாணவர்கள் தங்களுக்கு உரிய கேள்வி தாள் இல்லை...மாற்றித்தரவும் என வற்புறுத்தியுள்ளனர். ஆசிரியர் இது தான் உனக்குரியது என்று கூறி அமரச் செய்துள்ளார், மீண்டும் தேர்வு கண்காணிப்பாளர், தனி அலுவலர் , பறக்கும் படை என அனைவரிடமும் சொல்லியும் கேள்வி தாளை மாணவர்களால் மாற்ற முடிய வில்லை என்பது செய்தித்தாள் வழியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

பாதிக்கப்பட்ட 29 மாணவர்கள் தேர்வு நடந்த பள்ளியில் , மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல். சி. மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். அப்படி இருக்கும் போது அருகில் உள்ள அரை மாணவர் விடை தாளை பார்த்து இருந்தாலே , இத் தவறை மாற்றி இருக்க முடியும். தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அலுவலர் முறையான பயிற்சி எடுத்திருப்பின் அல்லது நான்கு வகை வினாத்தாள் பற்றி போதுமான அறிவு பெற்று இருப்பின் மாணவர்களுக்கு சரியான விடைத்தாளை தந்திருக்க முடியும்.


" தேர்வு பணியினை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் 'ஆளை விட்டால் போதும்'என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். " தினமலர்.(25 மார்ச் 2010 ) .

அரசு கவனத்திற்கு ....ஏன் மூத்த ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர். ?
இளம் ஆசிரியர்கள் ஏன் பார்க்க துடிக்கின்றனர்...? இதுதான் வயது வித்தியாசம் ....அனுபவ முதிர்ச்சி . இன்று ஆசிரியப் பணி என்பது எலி வாங்கித்தந்த வேலை போல ஆகிவிட்டது. எலி வேலை வாங்கி தந்த கதையை கூறும் முன் ....மூத்த ஆசிரியர்களின் மன நிலை சொல்லி விடுகிறான்.

தங்கள் மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு பணிக்கு சென்றால் மதியம் தம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வர முடியாது. தேர்வு பணிக்கான பள்ளியின் தூரமும் அதிகமாக இருக்கிறது, பணியினை முடித்து வகுப்புக்கு வர முடியாத நிலையில் மாணவன் படிப்பு பதிக்கப் படும் என்ற எண்ணத்தில் அநேகம் ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர் . இளம் ஆசிரியர்கள் எப்படி மதியம் இந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தப்பிப்பது,மதியம் ஓய்வு எடுப்பது என்று நினைத்து தேர்வு பணியினை விரும்பி வாங்கி பார்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த வகையில் உண்மை .

அரசு தேர்வு பணி முடிந்த பின்னும் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் பற்றி சர்வே நடத்தினால், நான் சொல்லுவது போல் மாணவர்கள் மீதும் , பள்ளியின் நன் மதிப்பின் மீதும் அக்கறை மற்றும் பற்றுள்ள ஆசிரியர்கள், அதுவும் மூத்த ஆசிரியர்கள் தான் அதிகம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவர்.இது எல்லா நிலை மாணவர்களுக்கும் பொருந்தும் . பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே பிற மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டிஉள்ளது.
அதுவும் தேர்வு பணி வாங்க மறுப்புக்கு காரணம் ஆகும்.

அரசு எல்லா விசயங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற விடை தாள் மாற்று குளறுபடி ஆகாமல் தடுக்க , தேர்வுக்கு முன்னே அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்துவது எப்படி?விடைத்தாள் வகைகளை அறிவது எப்படி? மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி ?மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி ? என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவது அவசியம் ஆகும் .

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அவன் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து , மதிப்பெண் தருவதால் மட்டும் பாதிக்கப் பட்ட மாணவனின் மன நலனை திருப்பி தரமுடியுமா? அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு உள்ளதே! . கல்வியாளர்கள் மாணவன் நலம் பற்றி சிந்தித்தால் இது போன்ற தவறுகள் நடக்காது.

ஆசிரியர்களை தண்டிப்பதால் மட்டும் இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காது என்பதற்கு என்ன உறுதி? தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் செல்லாததனால் தான் கேள்வி தாள் குளறுபடியை சரி செய்ய முடியவில்லை என்று கூறும் முதன்மை தேர்வு அதிகாரியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். தண்டனை பெற்று அப்பணியினை தொடருவதை விட தவிர்ப்பது நல்லது என்ற மனநிலையும் தேர்வு பணி மறுப்புக்கு காரணமாகவும் அமையலாம். ஆகவே , முறையான பயிற்சி , தேர்வு பணி குறித்து அச்சம் போக்குதல் போன்றவற்றால் மட்டுமே நாம் சரி செய்திட முடியும் .

மத்திய அரசினை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்து, பனிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வினையும் நடத்தி , உயர் கல்வியில் மாணவன் சேர்வதற்கு , மாணவனின் அனைத்து திறன் வெளிப்படும் வகையில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி , மாணவன் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவனுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் பிற துறை சார்ந்த படிப்புகள் தொடர நடவடிக்கை எடுத்தால் , ஆசிரியர்களும் மாணவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வியை தராமல் , மாணவன் திறன் சார்ந்த கல்வியை தந்து மாணவனின் முழு திறமை வெளிப்பட உழைப்பார். ஆசிரிய பணியும் எலி கொடுத்த வேலையாக அமையாது.


அது என்ன எலி கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஊரில் எலி அதிகம் தொல்லை தந்தது , அந்த கிராமம் முழுவதும் ஒன்று கூடி, அனைவரும் பூனை வளர்ப்பது என முடிவெடுத்தனர். பூனை வளர்க்க பால் தேவை பட்டது , அனைவரும் வீட்டிற்கு ஒரு பசுமாடு பாலுக்காக வளர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பசு வளர்க்க அனைவரும் புல் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வயலுக்கு உழைக்க செல்வது என முடிவெடுத்து , வேலைக்கு சென்றனர். அப்போது தம் குழந்தைகள் தேவையிலாமல் சண்டை போடுவது கண்டு , கிராமம் அந்த ஊருக்கு அருகில் உள்ள படித்த இளைஞருக்கு வேலை தருவது எனவும் அதற்க்கு சம்பளம் கிராம பொது சபை கொடுப்பது எனவும் முடிவெடுத்து , வேலை கொடுக்கப்பட்டது. மாணவனுக்கு அதாவது தம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க ஆசிரிய பணி அல்ல , குழந்தைகளை கண்காணிக்க , சண்டைபோடாமல் பாதுகாக்க தரப்பட்ட வேலை . இது கிராம குழந்தைகள் நலம் கொண்டு ,அறிவு வளர்க்க ஏற்படுத்தப்பட்ட வேலை அன்று. எலி கொடுத்த வேலை.

சமச்சீர் கல்வி கொண்டுவரும் நம் தமிழக அரசு தயவு செய்து மத்திய அரசை போன்று பொது தேர்வினை ரத்து செய்து ,மாணவன் நலனில் அக்கறை கொண்டு மாணவன் அனைத்து திறன் பேரம் வகையில் அட்டை கல்வி கொண்டுவந்ததை போன்று , மதிப்பெண் கல்வி முறையை நீக்கி , கல்லூரி கல்வியில் அவனின் அனைத்து திறனும் சோதிக்கும் வகையில் பொது தேர்வு நடத்தி, அதில் அவன் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவனுக்கு உரிய படிப்பினை கொடுப்பதன் மூலம் தமிழக கல்வி துறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழலாம்.


அரசு கவனத்தில் கொண்டு வர நீங்களும் நல்ல கருத்துகள் பகிர்ந்து , தமிழக மாணவர்கள் கல்வி நலனில் பாடுபட அனைவருக்கும் விஷயத்தை எடுத்து செல்லுவோம் , சொல்லுவோம்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

சிவராத்திரி


மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

திங்கள், 15 மார்ச், 2010

யுகாதி

சந்திரனின் பிறை அடிப்படையில் அமாவாசை முடிவு முதல் அடுத்த அமாவாசை முடிவு வரை ஒரு மாதம் என்று கணக்கிடப்பட்டு, 12 மாதங்கள் ஒரு சந்திர வருடம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர மாதம் வளர் பிறை மற்றும் தேய்பிறை என இரு பாகங்களாக இருக்கும்.

16.3.2010 செவ்வாய் கிழமை அன்று காலை 2:30 மணி அளவில் பால்குன மாஸ அமாவாசை முடிந்து சைத்திர பிரதமை திதி பிறப்பதால் உதயத்தில் பிரதமை திதி உள்ள அன்று யுகாதி கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சூரியனின் அடிப்படையில் வருடப்பிறப்பு அமைகிறது.



யுகாதி சாலிவாகன சகாப்தம் முதலாக கொண்டு கணக்கிடப்படுகிறது, வியாழன்கிரக அடிப்படையில் 60ஆண்டு சுழற்ச்சி அடிப்படையில் ஆண்டின் பெயர் இடம் பெறுகிறது. வரும் ஆண்டு விக்ருதி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது


சந்திரன் பௌர்னமி அன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலே மாதம் அழைக்கப்படும். உதாரணமாக சைத்ரமாதம் பௌர்னமி அன்று முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தின் இருக்கும்.



சந்திர மாதத்தின் அளவு: சராசரி: 29 நாள் 12 மணி நேரம் 44 நிமிடம்

சந்திர வருடத்தின் அளவு: 354.3672 நாட்கள்

சூரிய வருடம் – சந்திர வருட வேறுபாடு 10.89 நாள்



இப்படி வித்யாசப்படும் 10.89 நாளை 2.7 வருடத்திற்கு ஒரு முறை ஒரு கூடுதல் மாதம் சேர்த்து சூரிய வருடத்துடன்சமப்படுத்துவார்கள்.



எந்த சூரிய(சௌரமான)மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறதோ அந்த சூரிய(சௌரமான) மாதத்திற்கு உள்வரும் சந்திரமாதம் அதிகமாதம் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாதத்தில் வரும் சந்திரமாதம் கணக்கில் கொள்ளாமல் அடுத்து வரும் சந்திரமாதம் அந்த சூரிய மாதத்தின் பெயராலே நிஜசந்திர மாதம் என்று அழைக்கப்படுகிறது.



புது வருடமான விக்ருதி ஆண்டில் சூரிய(தமிழ்) சித்திரை மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் அதில் வரும் “சந்திரமாதமான” வைசாக மாதம் “அதிகவைசாகம்” என்றும் அடுத்து சூரிய மாதமான வைகாசியில் வரும் சந்திரமாதம் “நிஜ வைசாகம்” என்றும் அழைக்கப்படும்.



வழிபாட்டு முறை:



அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக்கோலம் இட்டு, நிலைப்படிக்கு மாவிலை தோரணம் கட்டி, நல்லலெண்ணெய், சீயக்காய் தலைக்கு தேய்த்து குளித்து. புத்தாடை உடுத்தி, பூஜை அறையில் புது ஆண்டு நன்மைகளை தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இறைவனை வணங்கி, பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவார்கள்.



வேப்பம் பூ - மொட்டு, புளி நீர், வெல்லம், இளம் மாங்காய் துறுவல், பச்சை மிளகாய், உப்பு கலந்த அறுசுவை நீர் பருகுவார்கள்.



மதியம் அறுசுவையான உணவுகளை இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று வருவார்கள். உறவினர்கள்,பெரியவர்கள் காலில் வழுந்து ஆசிபெறுவதே இந்நாளில் மிக முக்கியமான வழக்கம் ஆகும்.



இந்நாளில் கலை கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுஅதில் கலைஞர்கள் சிறப்பிப்பார்கள்.



தமிழகத்திலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இன்றைய தினம் சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் தந்து கௌரவிக்கப்படுவார்கள்.



யுகாதி வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 7 மார்ச், 2010

கன்யாகுமாரி



Kanyakumari takes its name from the Kumari Amman or Kanyakumari Temple, situated in the town, on the sea-shore, the very confluence of the three water-bodies - Bay of Bengal, Indian Ocean and the Arabian Sea. In his work on ancient India, Ptolemy had identified Kanyakumari (Cape Comorin) along with the Gulf of Mannar as a centre for pearl fishery. He also identifies Korkai, a place to the east of Kanyakumari as an emporium of pearl trade,also Travancore Census 1931 says that Paravars ruled that Coast and built the temple for their reverence to Sea Goddess.

There are multiple myths revolving around this place:

According to hindu legend, Kanya Devi, an avatar of Parvati, was to marry Shiva, but as he failed to show up on his wedding day, the rice and other grains meant for the wedding feast remained uncooked and remain unused thereafter. As the legend goes, the uncooked grains turned into stones as time went by. Some believe that the small stones which look like rice on the shore today, are indeed grains of the wedding that was never solemnized. Kanya Devi is now considered a virgin goddess who blesses pilgrims and tourists who flock the town.
According to another hindu legend, Lord Hanuman dropped a piece of earth as he was carrying a mountain with his life-saving herb, Mrita Sanjivani from the Himalayas to Lanka (Sri Lanka) during the Rama-Ravana war. This chunk of earth is called Marunthuvazh Malai, which is literally translated to "hills where medicine is found".This is said to be the reason for the abundance of unique native medicinal plants in the area. Marunthuvazh Malai is located near Kottaram about 7 km from Kanyakumari town on the Kanyakumari-Nagercoil highway.
The sage Agasthya, who was himself an expert in medicinal herbs, is believed to have lived around this site in ancient days. The reason why, some believe, so many medicinal herbs are to be found on these hills near Kanyakumari. There is even a village by the name Agastheeswaram close to the town, named after the sage. Today, there is a small Ashram on the middle of the Maruthuvazh Malai hill, which tourists visit (after a short trek from the base of the hill), both to visit the Ashram and also to take a glimpse of the sea near Kanyakumari a few kilometres away, and the greenery below.

The 133 ft tall Thiruvalluvar StatueKanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers. Later Kanyakumari became part of the Venad kingdom with its capital at Padmanabhapuram. The king of Venad, Anizham Thirunal Marthanda Varma, established Travancore by extending his domain further north up to Azhva, during his reign from 1729 to 1758. By this, the present Kanyakumari District came to be known as Southern Travancore. In 1741, Maharaja Marthanda Varma defeated the Dutch East India Company at the famous Battle of Colachel.

Kanyakumari was under the rule of the Paravar Kings till the downfall of Pandyas,and later by kings of Travancore under the overall suzerainty of the British until 1947, when India became independent. Travancore joined the independent Indian Union in 1947. The reign of the Travancore royals came to an end.

Under the Travancore state, the town, and the modern administrative district that bears its name, Kanyakumari District, gained both socially and economically.

In 1949, Kanyakumari became part of the reconstituted Travancore-Cochin State. Around this time, a popular agitation for the amalgamation of Kanyakumari District with Tamil Nadu by the Tamil-speaking majority of the district intensified, under the leadership of Kavimani Desigavinayagam Pillai Eventually, in 1956, Kanyakumari was integrated with Tamil Nadu (then known as Madras State) as per the language-based reorganisation of States.

Christianity arrived in South India around AD 52 through St. Thomas, one of the twelve Apostles of Christ. However, European missionaries, who arrived in the 16th century, propagated Christianity in the area. St. Francis Xavier (April 7, 1506 – December 2, 1552) was the pioneer in preaching Christianity in the present day Kanyakumari district. Islam is believed to have entered the southern part of India through Kanyakumari during the early part of the eighth century AD through traders and missionaries who came through sea-routes. Islam, Christianity and Jainism have also contributed to the architectural wealth and literary heritage of the region.