ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

தொலைக்காட்சி ஒரு தொல்லை





வீட்டுக்கு வந்தவுடனே நம்மாளுங்க 90% பேர் பாக்குறது என்னான்னு யோசிச்சு பாத்தோம்னா அது டிவி ரிமோட். அதுக்குள்ள தான் எவ்வளவோ விஷயங்கள். அந்த காலத்துல நிறைய டிவிக்கள் வருவதற்கு முன்னாடி, எல்லாரும் என்ன வேலை இருந்தாலும் உக்காந்து 'ஒலியும் ஒளியும்' பாப்பாங்க. அப்புறமா ராமயணம், மஹபாரதம் இதெல்லாம் பாத்தோம். ஆனா காலம் போக போக நிறைய சானல்கள் வந்தன. அதனொடு சேர்த்து கொடுத்திருக்காங்க, ஒரு ஒரு விஷயத்தையும் ஒரு ஒரு சானலும்!

ஒரு சானல் பாத்தா உங்களுக்கு, சிரிப்பு வராத விஷயதுக்கும் எப்படி சிரிக்கணும்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா ஆட தெரியலைனாலும் எப்படியெல்லாம் சமாலிக்களாம்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா அறிவு பூர்வமாவே பேசுரது எப்படின்னு சொல்லி கொடுப்பாங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

உயிர கொடுத்து ஒரு ஆள் ஆடிருப்பான். இன்னொரு ஆள் நம்ம உயிர் போற அளவுக்கு ஆடிருப்பான். இதுக்கு நடுவர்கள், என்ன சொல்லுவாங்க தெரியுமா?, இந்த மாதிரி ஒரு ஆட்டத்த இது வரைக்கும் யாருமே பாத்திருக்க மாட்டாங்கன்னு ஒரு பதில் சொல்லுவார்கள். அட அந்த கருமத்த சரியில்லனா சரியில்லன்னு சொல்லுங்களேன். அத அந்த டிவி ஆட்கள் அனுமதிச்சிதான் தொலைங்களேன்யா. எவ்ளோ நாளுக்குதான் இப்படியே சொல்லுவீங்கப்பா? எப்போ யார் எப்படி ஆடினாலும், ' உங்களோட அந்த பாடி லாங்குவெஜ் இருக்கு பாத்தீங்களா பிரமாதம்' அப்டி இப்டின்னு சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்மள ரணகளப்படுத்தரதயே வேலயா வெச்சிருக்கவங்க பல பேர் உலாவுகிறார்கள். மக்களே உஷாரு! மீறி பாத்தா அடங்கப்ப சாமி நாங்க என்ன பண்ணுவோம், தலைவர் கௌண்டமணி சொல்ற மாதிரி, "நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா' அப்டின்னு அடுத்த சானலை மாத்துவோம்.

இன்னொரு சானல் வரும் பாருங்க, கதற கதற அடிப்பானுங்க, இன்னொரு சானல் எந்த செய்தி சொல்லுதோ, அதுக்கு எதிர் மாறாவேதான் செய்தி சொல்லுவாங்க. இவங்களுக்கு மட்டும் இது ரொம்ப ஈசி. இவங்களுக்கான எதிரி சானல் என்ன சொன்னாலும் இல்ல சாமி போட்ட இவங்க பொழுது ஒடிடும். நாம வேற என்ன பண்ணுவோம், மறுபடியும் முதலெந்து சியர்ஸ் சொல்லணும். அடுத்த சானலுக்கு போவோமா ரெடியா?

அடுத்த சானல் மாத்தினா, அங்க ஒரு ரகளை விட்ராங்க பாருங்க, 'நான் வேற நாடு போகறது தடை பட்டுகிட்டே இருக்குங்க என்று கவலையோடு ஒருவர் சொல்ல, கவலைப்படாதீங்க உங்க பேர் சொல்லுங்க, அம்மா எல்லாத்தையும் சரி பண்ணுன்வாங்க என்று சொல்லி, ஒரு முதிர்ந்த மேடம் பக்கம் திரும்ப, அவங்க உடனே அந்த பக்கம் இருக்கிற கரும்பலகை பக்கம் திரும்பி, வேகமா ' உங்க பேர் சொல்லுங்க சார்' அப்படி சொன்ன உடனே, இவர் , ' என் பேர் ராஜசேகர் மேடம்' என்று பய பக்தியோடு கூற, மறுபடியும் அவர், 'உங்க பிறந்த தேதி சொல்லுங்க' என்றவுடன், இவரும் சொல்லி முடிக்க, ஏதாவது தெளிவா சொல்லுவார்னு நாமலும் சலைக்காம பாத்துட்டு இருப்போம்.

அப்போ ஒரு விளம்பர இடைவேளை. நம்ம பய புள்ளைங்க எவன் கேக்கறான், அதெல்லாம் வேணாம்டா, ஆப்பு ரெடி ஆகுதுடான்னு சொன்னா? அதற்குள் விளம்பர இடைவேளை முடிய, அந்த மேடம், வேகம் வேகமாக சில கூட்டல் கழித்தல் அந்த கரும்பலகையில் நிகழ்த்தி இருப்பாங்கனு நினைக்கும் படியாக நிறைந்திருக்கும். அவங்க தொண்டையை கனைத்து கொண்டே, ' மிஸ்டர் ராஜசேகர், உங்க ராசி எண் படி, உங்க பேரில் ஒரு அழுத்தம் இல்லை பாருங்க. அந்த ஆ சப்தம் தான் மூலாதாரம். அது இல்லைன்னா வாழ்க்கை நரகமாகதான் இருக்கும், அதனால இன்னுமொரு ஆங்கில எழுத்து A சேர்த்துகோங்க. எங்கயோ பொய்டுவீங்க. அதுக்கு அப்புறம் பாருங்க, உடனே வெளி நாடு போய்டுவீங்க'. அப்டின்னு சொன்னவுடன், அகில உலகத்தின் ஒரே எண் கணித மேதை அப்டின்னு போட்டு, நிகழ்ச்சி முடியும்!

அவன் அவன் பாஸ்போர்ட், விசான்னு எல்லாத்தையும் எடுத்து வெசிக்கிட்டு, கதறிக்கிட்டு இருக்கான். போக முடியலை. இது ஒரு எடுத்துக்காடுதான். இது போல பல நிகழ்ச்சிகள், வாஸ்து கலாமணி, எண் கணித மேதைகள் எவ்வளவோ பேர் உலவுகிரார்கள். இதன் மூலம் உழைப்பை மறக்க செய்யும் சானல்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படியெல்லாம் நிகழ்ச்சி காட்டிகிட்டே இருந்தா, நான் அழுதுடுவேன். வேணாம் வலிக்குது!ஒரு பக்கம் பாத்தா சூடான மோதல்கள், கருத்து பரிமாற்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகளால் அலங்கரித்தாலும் அந்த மீடியா என்ற மகுடத்தில், மத்த விஷயங்கள் எல்லாமே கவரிங்காவே கறுத்து போகுது!

ஏங்க அந்த துறையில உள்ள ஆட்கள் ஏதாவது பாத்து பண்ணுங்கப்பா. வெள்ளி திரை இல்லன்னா சின்ன திரை பாதி இல்லாம போய்டும் நிலைதான் இருக்கு. பாத்துக்கங்கப்பா, இப்போவே கண்ண கட்டுது!!!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழின் பெருமை


தமிழை ஆராயும் ஆய்வாளர்களே தமிழின் பெருமை உணர்ந்து செயல்படுங்கள் . உங்களின் கவனத்திற்குச் சில சொற்கள்
" திருவள்ளுவர் காலம் முதல் நம் காலத்தில் பாரதியார் ,மறைமலையடிகள், திரு. வி . க . வரை பல தமிழ்ப் பேர் அறிஞர்கள் பேசியும் எழுதியும் வளர்த்துப் பண்படுத்திய பெருமொழி நம் தமிழ் மொழி . எயத்தனையோ இடை யுருகளுக்கு இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மொழியும் பண்பாடும் இடையறாமல் வந்திருப்பது நம் தமிழின் ஒரு தனிச்சிறப்பு . அரசுகள் மாறின அமைசுகள் மாறின ஆனால் தமிழ்மொழியும் பண்பாடும் மாறாமல் வந்துள்ளன . அவ்வாறு இடையறாமல் வளர்ந்து வந்திருக்கும் இவ்விரு செல்வங்களையும் காப்பாற்றும் பெரிய பொறுப்பு இளைங்கர்களுக்குண்டு "
-மு . வரதராசனார் பேசியது .

“ நான் யாரென்று கேட்டால் கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ்க் காதலன். தமிழைப் பெருங்கடல் என்று தமிழை அடக்கத்துடன் ஆராய்ந்து தட்டுத்தடுமாறித் தமிழ் பேசுகிற சிற்று}ழியன் நான். நான் தமிழை என் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறேன்”
- கமில் சுவலபில்